பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது சண்டை சச்சரவு, தாத்தா, பாட்டி, அம்மா, அண்ணா, என ஒரு குடும்பம் போல் பயங்கர செண்டிமெண்டாகவும் சென்றுகொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் சூடு பிடிக்காமல் இருந்த பிக்பாஸ் சீசன் 4 தற்போது அர்ச்சனா, சுசித்ரா என வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வர வர பிரச்சனைகளும் தீயாய் கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
மேலும், பிக்பாஸ் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறியதும் வைல்ட் கார்டு மூலமாக மற்றொரு விஜய் டி.வி பிரபலம் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
அவர், பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளைக் கொண்ட முகம்மது அசீம் தான் அந்த பிரபலம் என தகவல்கள் வெளியானது.
தற்போது, அவரைத்தொடர்ந்து பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் பாவனா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக மற்றொரு தகவலும் காட்டு தீ போல் பரவியது.
இதுகுறித்து பாவனைவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அவர் தற்போது ஐபிஎல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் பிசியாக உள்ளதால் அதற்க்கு வாய்ப்பே இல்லை என இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.




















