மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம் காலமானார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவரது தண்டனை விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு விடுதலையாவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இவரது மூத்த அண்ணனான சுந்தரவதனம் காலமானார், அவருக்கு வயது 67, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மகன் தான் டாக்டர் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.