எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள் பதிக் அல்லது கைத்தறி நெசவு தொழிற்துறையினர் உற்பத்தி ஆடைகளை அணிந்து அலுவலங்களுக்கு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது அரச அதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்ட வேலைத்திட்டம் என பதிக், கைத்தறி நெசவு மற்றும் தேசிய ஆடை உற்பத்தி ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனை பிரதி வெள்ளிக் கிழமையும் நடைமுறைப்படுத்துமாறு அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக அரச நிர்வாக அமைச்சின் ஊடாக அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.