கிழக்கில் அரசாங்கம் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அரச காணிகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழர் பிரதேசங்களில் வாழும் தமிழ் இளைஞர் யுவதிகள் உடனடியாக சென்று அதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில் தமிழர் பிரதேசங்களில் உள்ள அரச காணிகள் மாற்றினத்தவருக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.