நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
இன்று நாடாளுமன்றம் கூடியபோது, சுமந்திரன் எம்.பி உரையாற்றியபோது, குறுக்கீடு செய்த அமைச்சர் சரத் வீரசேகர அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி தர்க்கத்தில் ஈடுபட்ட அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு, தெற்கில் ஜே.வி.பியினரது உயிர்நீத்த வீரர்களை அனுஸ்டிப்பது போலவே வடக்கில் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுபடுத்துகின்றார்கள் என சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.