நாட்டில் நேற்று (1) மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனடிப்படையில், மொத்த மரணங்கள் 122 ஆக உயர்ந்துள்ளது.
74, 81 வயதுடைய இரண்டு ஆண்களும், 74, 93 வயதுடைய இரண்டு பெண்களும் மரணித்தனர்.
கொழும்பு 12, கொலன்னாவ, ராஜகிரிய மற்றும் கொழும்பு 10 ஐ சேர்ந்தவர்களே உயிரிழந்தனர்.
3 பேர் வீடுகளில் மரணித்தனர். 81 வயதான பெண் ஐ.டி.எச் வைத்தியசாலையில் மரணித்தார்.
இவர்கள் நான்கு பேரும் கோவிட் -19 நோய்த்தொற்றுடன் நீண்டகால நோய்களால் மரணித்தனர்.


















