களுத்துறை – அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் மீண்டும் கொரோனா நோயாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனால் அளுத்கம வாராந்த சந்தை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
அண்மை நாட்களில் அளுத்கம நகரில் பலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு இருந்ததுடன், பொது சுகாதார ஊழியர்கள் மீது எச்சில் துப்பிய சம்பவமும் இந்த இடத்தில் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


















