கலென்பிந்துனுவெவ ஹிப்வுட்டுகொல்லேவ வித்தியாலய ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளாகி மாணவி ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டு பயிற்சியை முழுமைப்படுத்தவில்லை என்பதற்காகவே மாணவியை ஆசிரியர் தாக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியின் பெற்றோர் கடந்த 8ஆம் திகதி பிற்பகல் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாணவி கலென்பிந்துனுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை நடாத்திய ஆசிரியரிடம் நேற்று வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.