இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 152 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 154 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் வெள்ளிக்கிழமையும் (14) ஒருவர் ஞாயிற்றுக்கிழமையும் (13) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரகமவைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர், மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வெள்ளிக்கிழமை (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 14ஐச் (கிராண்ட்பாஸ்) பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (13) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.



















