கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியில் கைவிடும் சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக Save the Children தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆசியர்களிடம் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பை முன்னிறுத்தி, இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக பல குழந்தைகள் தங்கள் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக சிரியாவில் பாடசாலை படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிரியாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.