கொரோனாவினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் (முல்லேரியா) கொரோனா சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணொருவரே இரட்டைக்குழந்தை பெற்றெடுத்தார்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் இடம்பெற்றது. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.