லண்டனில் தடை வருவதற்கு முன் சென்றுவிட வேண்டும் என்று ஏராளமான இரயில் நிலையத்தில் வந்து குவிந்து நின்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக Tier 4 எனப்படும் கட்டுப்பாடுகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார்.
அதன் நள்ளிரவுக்கு பின் லண்டனை விட்டு யாரும் வெளியேறக் கூடாது, அப்படி மீறினால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது.
https://twitter.com/chrisshipitv/status/1340394339294437378
இந்த கடுமையான கட்டுப்பாடு விதிகள், கிறிஸ்துமஸை கொண்டாட காத்திருந்த மில்லியன் கணக்கான மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில், இந்த பயணத்தடை வருவதற்குள் எப்படியாவது லண்டன் நகரை விட்டு சென்றுவிட ஓட வேண்டும் என்பதற்காக, விட்டால் போதும், தப்பினால் போதும் என்பது போல், இரயில் நிலையங்களில் ஏராளமான மக்கள் குவிந்து நிற்கின்றனர்.
https://twitter.com/chrisshipitv/status/1340410423858900992
அதன் படி St Pancras இரயில் நிலையத்தில், மாலை நேரத்தில் மக்கள் வேறு பகுதிக்கு செல்வதற்கு வந்து காத்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த கட்டுப்பாடுகள், ஆனால் அந்த விதிகள் எல்லாம் மறந்துவிட்டு, மக்கள் அஜாக்கிரதையும் இருப்பதை இது காட்டுவதாக சமூக ஆர்வர்லர்கள் கூறி வருகின்றனர்.