வவுனியாவில் கொரனா தொற்று ஏற்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாளை முதல் கல்விச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.