நேற்று நாட்டில் உறுதி செய்யப்பட்ட 618 கொரோனா தொற்றாளர்களில் 460 பேர் மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து 241 பேரும், களுத்துறையிலிருந்தும் 120 பேரும், கம்பஹாவிலிருந்து 99 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
கொழும்பில்- பொரளையிலிருந்து 31 பேரும், கிராண்ட்பாஸிலிருந்து 30 பேரும், கொம்பனித்தெருவிலிருந்து 28 பேரும், வெள்ளவத்தையிலிருந்து 27 பேரும், மட்டக்குளியிலிருந்து 23 பேரும், மருதானையிலிருந்து 17 பேரும், புளுமெண்டலில் இருந்து 16 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
காலி மாவட்டத்தில் இருந்து 45 பேரும், கண்டியில் இருந்து 33 பேரும், இரத்னபுரியிலிருந்து 27 பேரும், காலியில் இருந்து 13 பேரும், யாழ்ப்பாணத்தில் இருந்து 9 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏனைய 9 மாவட்டங்களில் இருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் 15,856 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹாவிலிருந்து 8,182 பேரும், களுத்துறையிலிருந்து 2,568 பேரும், கண்டியில் இருந்து 1,306 பேரும் தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.