கொவிட் தொற்றை அடுத்து மூடப்பட்ட விமான நிலையங்களை மீளவும் திறக்க அரசாங்கம் பகீரத பிரயத்தனங்களை எடுத்து வருகிறது.
அந்த வகையில் விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை, எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறப்பது தொடர்பில் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















