மன்னாரில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இலங்கையைச் சேர்ந்த இளைஞரான முஜிபூர் ரகுமான் இறுதிக்கட்ட போரின்போது தமிழகத்திற்கு அகதியாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2019 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் சென்றார். பின்னர் நேற்றிரவு அவர் மீண்டும் மன்னார் மாவட்டம் பேசாலையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்றடைந்தார்.
இவ்வாறு சென்ற அவரை கைது செய்த தமிழக பொலிஸார் மண்டபம் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















