இறுதி யுத்தத்தின் பின்னர் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அகற்றும் இடங்களுக்கு நேரில் சென்று அங்கு இடம்பெறுகின்ற மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியினை பார்வையிட்டார் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத்.
இன்று 22.12.2020 கிளிநொச்சி மாட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட உட்கட்டுமான கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையை பார்வையிட்டார். இதில் இராணுவத்தினரால் முன்னெடுக்கபடும் பணி மற்றும் சார்ப், டாஸ், மற்றம் கலோரஸ்ட் போன்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சின் செயலாளர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் வேலாயுதப்பிள்ளை பிறேமச்சந்திரன் அதன் உதவிப் பணிப்பாளர் நீல் பெர்ணாட்டோ,இராணுவ பொறியியல் பிரிவின் அதிகாரிகள்,கிளிநொச்சி மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலக அதி;காரிகள் உள்ளுர் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.