நாட்டில் மேலும் 428 கொரோனா தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38,059 ஆக உயர்ந்தது.
அடையாளம் காணப்பட்டவர்களில் 392 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர், 32 பெர் சிறைச்சாலைகளுக்குள் இருந்தும், வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.
மினுவாங்கொட- பேலியகொட கொத்தணியில் 34,381 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 8,578 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 442 பேர் கொரோனா சந்தேகத்தில் மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.



















