கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 686 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 30ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 7 ஆயிரத்து 887 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைக்குள் இதுவரை கொரோனாவால் 184 பேர் உயிரிழந்துள்ளனர்.




















