விலங்குகளை வேட்டையாடுவதற்காக பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்புபடை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் வவுனியாவின் மகாகச்சக்கொடி – அலுத்வத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா மகாகச்சகொடியவில் வசிக்கும் அச்சிந்த திஸாநாயக்க (வயது-34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இறந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் அலுத்வத்த காட்டு விலங்குகளைத் துரத்தச் சென்றிருந்தபோது விபத்து நடந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற மின் இணைப்புகளை அமைத்த நபர் யாரென இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை எனவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடல் திடீர்மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



















