யாழ்ப்பாணம், பொற்பதி பகுதியில் கலாச்சார சீரழிவு இடம்பெறும் தகவலிற்கமைய விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த விடுதியில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிசார் இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.
விடுதி உரிமையாளர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



















