முகக்கவசம் அணியத் தவறிய மற்றும் கொரோனா சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை 2,172 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட நபர்கள் மீது விரைவான ஆன்டிஜென் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



















