இங்கிலாந்தில், வரும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்பூசிகள் துறை அமைச்சரான Nadhim Zahawi இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படலாம் என்று கூறியுள்ளார் அவர்.
செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து வயது வந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களுக்குள்ளாகவே அந்த இலக்கு எட்டப்பட்டுவிடலாம் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதையடுத்து, பொதுமுடக்கம் விரைவில் விலக்கிக்கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இன்று, சுமார் ஐந்து மில்லியன் மக்கள் கொரோனா தடுப்பூசி போட அழைக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பருக்கு பதிலாக ஜூன் மாதத்திலேயே தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்பட்டுவிடும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.