கொரோனா தொற்று அலை மீண்டும் பரவும் என்ற அச்சத்தில் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் முகாமை சீனா அமைத்துள்ளது. 600 இராணுவத்தினர், வெறும் ஐந்து நாட்களில் ஆயிரக்கணக்கான தனிமைப்படுத்தும் பிரிவுகளைக் கொண்ட பிரமாண்டமான மையத்தைக் கட்டியுள்ளனர்.
இந்த மையத்தில் 4,000 பேரை தனிமைப்படுத்த வசதியுள்ளது.சீனாவின் வடக்கு ஹெபீ மாகாணத்தில் கொரோனா அலையொன்று உருவாகலாமென்ற அச்சம் சீனாவில் எழுந்துள்ள நிலையில், அவசர அவசரமாக இந்த புதிய தனிமைப்படுத்தல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
108 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த முகாமில் சுமார் 2,000 அறைகள் அமைக்கப்படுகின்றன. அந்த பகுதியில் மைனஸ் அளவில் வெப்பநிலை காணப்பட்ட போதும், 24 மணித்தியாலமும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
ஷிஜியாஜுவாங் நகரின் புறநகரில் உள்ள ஜெங்டிங் கவுண்டியில் ஜனவரி 13 ஆம் திகதி கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆறு நாட்களுக்குள் கட்டடத்தில், 1,195 தற்காலிக அறைகள் நிறைவடைந்துள்ளன.