இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.
இத்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.
அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த, 68 வயதான ஆண் ஒருவர், மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (18) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியாவினால் ஏற்பட்ட உக்கிர சுவாசத் தொகுதி தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 06ஐச் (வெள்ளவத்தை/ கிருலப்பனை) பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நெவில் பெனாண்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த 17ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், நெவில் பெனாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த வியாழக்கிழமை (14) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் சுவாசத் தொகுதி செயலிழப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.