யாழ் மாவட்டத்தில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நேற்றைய கொரோனா நிலவர அறிவிப்பின்படி யாழ் மாவட்டத்தின், யாழ் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
அண்மையில் கொழும்பிலிருந்து திரும்பிய இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின் முடிவில், குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் தொற்றிற்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.