பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரியெல்ல பிரதேச செயலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 15ஆம் திகதி கிரியெல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
200,000 ரூபா பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.