வவுனியாவில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், அதில் கணிசமான இளையவர்களும் தொற்றிற்குள்ளாகி வருகின்றனர்.
நேற்று வவுனியாவில் 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதில் கணிசமான இளையவர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவுகளில் வவுனியாவை சேர்ந்த 25 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 25 வயதிற்கும் குறைந்த 13 பேர் உள்ளனர்.
29 வயதான தாயும், மூன்றரை வயதான மகனும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.