மட்டக்களப்பு புணானை கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்ச பெற்று வந்த ஒருவர் நேற்று இரவு (19) இரவு 7.30 மணியளவில் தப்பிச் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா தொற்று உறுதியான பின்னர் கடந்த 17ஆம் திகதி புணானை சிகிச்சை மையத்திற்கு இவர் அனுப்பப்பட்டார்.
விஹர மாவத்தை, மீத்தொட்டமுல்ல, கொலன்னாவ என்ற மகவரியிலுள்ள வெதுப்பகத்தில் பணியாற்றினார்.
649 / பி, அடகொட, எஹெலியகொட என்ற முகவரியை சேர்ந்த ஷெல்டன் பிரேமரத்ன (43) என்பவரே தப்பியோடியுள்ளார்.
.அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
புகைப்படத்தில் உள்ள நபர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரியை 071 859 11 38 என்ற எண்ணிலோ அல்லது அவசர இலக்கம் 119 ஐ அழைத்தோ தகவல் தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.