கட்டுநாயக்க கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க – வலானகொட பிரதேசத்தில் உள்ள வாடகை இல்லத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையிலேயே அவர் இன்று காலை கட்டுநாயக்க 18ஆவது தூண் அருகே கைதாகியிருக்கின்றார்.
அநுராதபுரம் – பதவிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் கட்டுநாயக்க பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் தொழில்புரியும் 25 வயது நபர் என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகிய நிலையில் ஆவர் தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.