சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மியா.
கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய், சூப்பர் ஹிட்டான ஜோசப் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே, தற்போது இவருக்குத் திடீரென திருமணம் முடிவாகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப் பட்டுள்ளது.
மேலும், இவர்கள் திருமணம் கண்ணூரில் நடக்கிறது. தொடர்ந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாளை மறுநாள் திருமண வரவேற்பு நடக்கிறது.
இவருக்கு இதில் திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறன்றனர். மேலும் திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா தொடர்ந்து நடிக்க, சனூப் சம்மதித்துள்ள நிலையில், அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.