• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தமிழர்களின் வரலாற்றில் இனப் படுகொலையென்பது தொடர்கதையாக நடந்திருக்கின்றது!

Editor by Editor
January 29, 2021
in இலங்கைச் செய்திகள்
0
தமிழர்களின் வரலாற்றில் இனப் படுகொலையென்பது தொடர்கதையாக நடந்திருக்கின்றது!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் பாதிக்கப்பட்ட மக்களும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் போராட்டங்களை நடத்தினார்கள். ஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்திற்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு கீற்றொளி 46ஆவது மனிதவுரிமை கூட்டத் தொடரில் நாங்கள் அறியக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் வரலாற்றில் இனப் படுகொலையென்பது தொடர்கதையாக நடந்திருக்கின்றது. 1958ஆம் ஆண்டில் முதற்தடவையாக தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தென்னிலங்கையில் அரங்கேற்றப்பட்டது. அதற்கு அடுத்ததாக இந்த இனப்படுகொலையானது வடக்கு கிழக்கில் மையங்கொண்டிருந்தது.

அந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் காரணங்களில்லாமல் கொல்லப்பட்டிருந்தார்கள். இலங்கை சுதந்திரமடைந்து 73ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற காலகட்டத்தில் 53ஆண்டுகளாக இனப்படுகொலைகளானது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று கடைசியாக முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையானது ஒட்டுமொத்தமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

அந்த வரிசையில் கொக்கட்டிச்சோலை படுகொலையானது நான் ஆசிரியராக இருந்த 1987ஆம் ஆண்டு காலத்தில் நடந்தது. 157அப்பாவிகள் அரச உத்தியோகத்தர்கள் என்றும் பாராமல் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதுவரை பொறுப்புக்கூறல் நடைபெறவில்லை, உண்மை கண்டறியப்படவில்லை, நீதி வழங்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதற்கான உத்திகள் கையாளப்படவில்லை. நிரந்தர அமைதிக்கான அரசியற் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை.

நீண்டகாலமாக உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எதையும் தீர்க்க முடியாத கையாளாகாத நிலையில் அரசாங்கம் காணப்பட்டது. உள்நாட்டுப் பொறிமுறை பலவீனமுற்றிருந்த காரணத்தினால் உள்நாட்டில் எதையும் சாதிக்க முடியாத நிலை இருந்த காரணத்தினால் இன்று உள்நாட்டில் முடித்துவைக்கப்பட வேண்டிய பொறுப்புக்கூறல், உண்மையைக் கண்டறிதல், நீதியை வழங்குதல், மீள நிகழாமல் தடுத்தல் போன்ற செயன்முறைகள் எமது கையிலிருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது என்றால் இதற்கான முக்கிய பொறுப்பினை அரசாங்கம் எடுக்க வேண்டும். அரசு இந்த விடயத்தை உள்நாட்டில் முடித்திருந்தால் இந்த விடயங்கள் சர்வதேசமயப்பட்டிருக்காது.

இன்று மனித உரிமை ஆணையாளர் ( மிச்சேல் பச்லட் )இந்த விடயத்தில் கூடுதலான கரிசனை செலுத்தியிருக்கின்றார். நீண்டகாலமாக தமிழர்களுக்கு கிடைக்காத நீதி, உண்மையைக் கண்டறிதல் விடயங்களில் இப்போது கடும் தொனியில் அவர் சொல்லியிருக்கின்றார்.

எங்களுக்கு அரசர்கள் நீதியைத் தராதுவிட்டாலும் தெய்வம் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் இம்முறை கருத்தொருமைப்பாட்டோடு ஒன்றாக இணைந்து செயற்பட்டார்கள்.

டயஸ்போராக்களும் இதற்கான வேலைகளை நேர்த்தியாக செய்தார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் பாதிக்கப்பட்ட மக்களும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் போராட்டங்களை நடத்தினார்கள். ஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்திற்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு கீற்றொளி 46ஆவது மனிதவுரிமை கூட்டத் தொடரில் நாங்கள் அறியக்கூடிய நிலைமைக்கு வந்திருக்கின்றது.

சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம், பலரை பல நாட்கள் ஏமாற்றலாம், எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாக இருக்கின்றது. உள்நாட்டுப் பிரச்சினையை உள்நாட்டிலே நீங்கள் தீர்த்திருந்தால் இன்று சர்வதேசமயப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்திருக்காது. இன்று இந்தப் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டிருக்கின்றதென்றால் இதற்குக் காரணம் உங்களது கையாளாகாத தன்மையும் இந்த இனப்பிரச்சினையை உரிய காலத்தில் தீர்க்காதமையுமே ஆகும்.

இனிமேலாவது திருந்தி நடந்து சகல மக்களும் சமத்துவமாக வாழக்கூடிய அதிகாரப் பகிர்வோடு கூடிய அரசியல் தீர்வை காண்பதோடு காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். சிறையில் வாடுகின்ற இளைஞர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.

கையகப்படுத்தப்பட்டிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அநாவசியமான முறையில் இராணுவமயப்படுத்தப்பட்டிருக்கின்ற சிவில் நிர்வாகம் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். தவறுகளை திருத்தி செயற்பட வேண்டும் என்பதை இவ்விடத்தில் நாங்கள் மிகவும் வினயமான முறையில் அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம். மீண்டும் மீண்டும் தவறுகளை செய்யாமல் திருந்தி நடப்பதற்கு பார்க்க வேண்டுமே தவிர பழிவாங்கம் உணர்வோடு செயற்பட்டால் பிரச்சினைகள் தொடர்கதையாகும்.

தமிழினத்தைப் பொறுத்தமட்டில் சமத்துவமாக வாழ்வதற்கு அவர்கள் விரும்புகின்றார்களே தவிர இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு அவர்கள் தயாரில்லை. எங்களுக்கு சலுகைகளைவிட உரிமை முக்கியமானது. இலாபங்களை விட நியாயம் முக்கியமானது. அந்தப் பாதையில் நாங்கள் என்றும் சென்றுகொண்டிருப்போம்.

சலுகைவாதிகளைவிட இலாபவாதிகளைவிட நியாயவாதிகள் தான் எங்களோடு கைகோர்த்து நிற்கின்றார்கள். போலியான அபிவிருத்தி மாயையில் மக்களை மயக்கி அவர்களின் வாக்குகளை கபளீகரம் செய்கின்ற அரசியல்வாதிகள் தொடர்பில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

Previous Post

மொட்டு – சுதந்திர கட்சி அணிகள் இடையே உக்கிர மோதல்!

Next Post

நானு ஓயா முதல் நுவரெலியா வரை கேபிள் கார் திட்டம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க …..

Editor

Editor

Related Posts

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்
இலங்கைச் செய்திகள்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை
இலங்கைச் செய்திகள்

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கைச் செய்திகள்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது
இலங்கைச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..
இலங்கைச் செய்திகள்

யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! மீண்டும் சென்னைக்கு..

December 11, 2025
இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி
இலங்கைச் செய்திகள்

இலங்கையை மீட்டெடுக்க 35 மில்லியன் டொலரை திரட்ட ஐ.நா முயற்சி

December 11, 2025
Next Post
நானு ஓயா முதல் நுவரெலியா வரை கேபிள் கார் திட்டம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க …..

நானு ஓயா முதல் நுவரெலியா வரை கேபிள் கார் திட்டம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க .....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025

Recent News

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் மாற்றம்

December 12, 2025
வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

வெளிநாட்டு நிவாரண உதவிகளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

December 12, 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

December 12, 2025
தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பி அசோக ரன்வல கைது

December 12, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy