இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர பணிப்புறக்கணிப்பில் குதித்துள்ளனர். இதனால், அதிகாலை வேளையில் பயணிகள் அந்தரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
வடபிராந்திய பிரதான முகாமையாளர் நியமனத்தை இடைநிறுத்தியுள்ளமைக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கையென குறிப்பிட்டு, எந்த முன்னறிவித்தலுமின்றி இன்று அதிகாலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண முகாமையாளராக குணபாலன் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை இறுதி நேரத்தில் அங்கஜன் இராமநாதன் தலையிட்டு அதை இடைநிறுத்தியிருந்தார்.
இதை எதிர்த்து இன்று வடமாகாணத்தில் உள்ள 7 டிப்போக்களின் ஊழியர்களும் பணிப்புறப்பணிப்பில் ஈடுபட்டனர்.