மேலும் 3 பேர் கொரோனா தொற்றினார் மரணித்துள்ளனர். இதன்மூலம், மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 38 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, வெலிசறை காச நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட நுரையீரல் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், நெவில் பெனாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த புதன்கிழமை (27) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் இருதய செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குருவாதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் நெஞ்சில் ஏற்பட்ட தொற்று மற்றும் அதிக இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.