பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் தாயக மீட்டுப்பு போராட்டத்தில் தமிழராய் ஒன்றிணைந்த உணர்வெழுச்சி போராட்டம், நான்காவது நாளாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஆரம்பித்துள்ளது.
இந்த பேரணியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்ணீர் மல்க வவுனியா நீதிமன்றத்தின் முன்னால் இணைந்து கொண்டனர்.
இதன் போது எமது கதறல்கள் சர்வதேசத்தின் மனசாட்சியை தட்டட்டும், இராணுவத்திடம் ஒப்படைத்த எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என கண்ணீருடன் சர்வதேசத்திடம் நீதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.