யாழ்.முத்திரச்சந்தி செம்மணி வீதியில் இளைஞர்கள் சிலர் போதையில் நின்று கொண்டு அந்த வீதியில் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்..
சில நாட்களாக இவ் வீதி வழியே சென்று வந்த பயணிகளிடம் போதையில் நின்ற இளைஞர்கள் சிலர் வழிமறித்து பணம் கேட்டுள்ளதாகவும், அவ்வாறு கொடுக்க மறுத்தவர்களை மிரட்டியுள்ளதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக அந்த இடத்தில் பதட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு நின்ற முச்சக்கர வண்டி சாரதிகள் அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டியதாகவும் குறித்த இளைஞர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் போதைப் பொருட்களை பயன்படுத்தியிருப்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது என்றும் சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.