இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு நடராஜன் தேவைப்படுவார் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதையடுத்து, விஜய் ஹசாரே தொடரில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று கலக்கிய தமிழக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டி நடராஜன் அவுஸ்திரேலிய தொடரில் தனது அபார பந்துவீச்சால் அனைவரையும் வியக்க வைத்தார்.
அவரின் சிறப்பான பங்களிப்பே இந்திய அணி டி20 கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.
அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றுஇந்திய அணி நாடு திரும்பிய பின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்காக நடராஜனை தேர்வு செய்யும்பொருட்டு அவரை தமிழக அணியிலிலிருந்து விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் ஒருநாள், டி20 தொடரில் நடராஜனுக்கு இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி கூறுகையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தமிழக வீரர் நடராஜன் இடம் பெற வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பும், இந்திய அணி நிர்வாககமும் எங்களிடம் கோரின.
இதையடுத்து, விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து டி.நடரஜான் விடுவிக்கப்பட்டார் என கூறியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிக்களுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் புனேயிலும், 5 டி20 போட்டிகளும் அகமதாபாத்திலும் நடக்கின்றன.