இலங்கையில் நேற்று (12)மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்க 384 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த, 63 வயதான ஆண் ஒருவர், கொட்டகலை வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த செவ்வாய்க்கிழமை (09) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த, 79 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் சிறுநீரக செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று முன்தினம் (11) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிரமடைந்த நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 59 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 05ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நுரையீரல் நோய் நிலை, கொவிட்-19 நிமோனியா மற்றும் சுவாசத் தொகுதி செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12 (வாழைத்தோட்டம்/ புதுக்கடை) பிரதேசத்தைச் சேர்ந்த, 449 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த ஜனவரி 28ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் நுரையீரல் நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.


















