இந்தியாவின் வெற்றிக்கான காரணத்தை அணித்தலைவர் விராட் கோஹ்லி, வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 5 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடவுள்ளது.
3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
அகமதாபாத்தில் நடந்த பிங்க பந்து பகல்-இரவு 3வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்தது, இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
பலர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளத்தை விமர்சித்தனர். இரு அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியும் அதே மைதானத்தில் மார்ச் 4ம் திகதி பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆடுகளம், நிலை மற்றும் பந்தின் நிறம் குறித்து இதுவரை நாங்கள் குறைசொன்னதே இல்லை, இது தான் எங்களின் வெற்றிக்கான காரணம்.
தொடர்ந்து அணியாக இவ்வாறே விளையாடி முன்னெறுவோம் என கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரை 3-1 அல்லது 2-1 என கைப்பற்றினால் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை 3-1 என வென்றால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதற்கு மீதமள்ள இரண்டு போட்டியிலும் அந்த அணி வெற்றிப்பெற வேண்டும்.
அதே சமயம், நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றினால், அவுஸ்திரேலியா அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
அதுமட்டுமில்லாமல், 1-1 அல்லது 2-2 என இந்தியா-இங்கிலாந்து தொடர் சமனில் முடிந்தாலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு அவுஸ்திரேலிய தகுதி பெறும்.