இந்தியா – இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது கோஹ்லிக்கும், பென் ஸ்டோக்ஸ்க்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
அகமதாபாத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்து வருகிறது.
போட்டியின் போது 13-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார், பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். சிராஜ் பவுன்ஸராக வீசியபோது, அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஸ்டோக்ஸ், முகமது சிராஜை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
இதையடுத்து, முகமது சிராஜ் நேரடியாக தலைவர் கோஹ்லியிடம் சென்று ஸ்டோக்ஸ் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட கோஹ்லி நேரடியாக, ஸ்டோக்ஸிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் சூடானதையடுத்து, நடுவர் நிதின் மேனன் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார்.
இது குறித்து சிராஜ் கூறுகையில், வாக்குவாதம் நடந்தது உண்மைதான் , ஆனால், அந்த சம்பவத்தை விராட் கோஹ்லி அருமையாகக் கையாண்டார் என கூறியுள்ளார்.
https://twitter.com/ChloeAmandaB/status/1367343160708370439