நாட்டில் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,000 ஐ கடந்துள்ளது.
கொவிட் 19 தொற்றிலிருந்து இன்று மேலும் 290 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,059 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் 2,780 கொவிட்19 நோயாளர்கள் தொடர்;ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.