கொழும்பு, கிராண்ட்பாஸ், காஜிமா தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவ இடத்திற்கு எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வருகை
தந்து நிலைமைகளை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.