சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கை உட்பட மேலும் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக நாட்டிற்குள் புதியவகை கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளதாவது, “ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நிலை காணப்படுகின்றது.
இதேவேளை சர்வதேச கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் எந்தவித சோதனை நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை.
மேலும் சுமார் 3 ஆயிரம் ட்ரோலர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதன் காரணமாக அவர்கள் கரைதிரும்பும்போது பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை மேற்கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.