தமிழக முதல்வர் பழனிசாமி தயார் குறித்து விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா மன்னிப்பு கோரியுள்ளார்.
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஆ.ராசா, அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை, எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை என குறிப்பிட்டார்.
ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதேநேரத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தின் போது தனது தயார் குறித்து ஆ.ராசா விமர்சித்தார் என முதல்வர் பழனிசாமி கண்கலங்கினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி-யும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, எனது பேச்சால் காயப்பட்டு கலங்கினார் என்பதை செய்தித்தாள்கள் வாயிலாக படித்து மிகுந்த மனவேதனை அடைகிறேன்
இடப்பொருத்தமற்று சித்தரிக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சுக்காக அடிமனதின் ஆழத்திலிருந்து எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்வாரேயானால் எனது மனம்திறந்த மன்னிப்பை கோருவதில் சிறிதும் தயக்கமில்லை.
— A RAJA (@dmk_raja) March 29, 2021
எனது பேச்சு தனிநபர் விமர்சனமல்ல, பொதுவாழ்வில் உள்ள இரண்டு ஆளுமை குறித்த மதிப்பீடும் ஒப்பீடும்தான் என கூறினார்.