இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரேநாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் கொரோனவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளை முதல் வரும் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகள் உடனான விமான சேவைகளையும் ஹாங்காங் அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மும்பை-ஹாங்காங் இடையிலான விஸ்தரா விமானங்களை மே 5ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.