மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு சென்ற இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான மன்னார் சாலை பேரூந்தில் அதி கூடிய பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் கொரோனா தொற்று சுகாதார நடை முறைகளை மீறி யாழ்ப்பாணம் நோக்கி பயணம் மேற்கொண்டமை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளர்.
மன்னாரில் இருந்து போக்கு வரத்து சேவையை முன்னெடுக்கும் அரச, தனியார் பேரூந்துகள் உரிய சுகாதார நடை முறைகளை பின் பற்றி, பேரூந்தின் ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றி போக்கு வரத்துச் சேவையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று முந்தினம் புதன் கிழமை மாலை இடம் பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் இராணுவம்,பொலிஸ்,கடற்படை அதிகாரிகள்,சுகாதார துறையினர்,திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


















