கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் பதிவான 1,959 வீதி விபத்துக்களில் மொத்தம் 205 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை 1,254 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புள்ளிவிவரங்களின் படி, ஆண்டின் பிற மாதங்களுடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் அதிக விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு பருவகால இடைவேளையின் போது இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றுள் மேல் மாகாணத்திலேயே 768 என்ற அதிக விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
வடமேற்கு மாகாணத்தில் 237 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் என்பனவே அதிகளவில் விபத்துக்களில் தொடர்புடையவையாக இருந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.



















