கொழும்பு துறைமுகத்திற்கருகாமையில் தீப்பற்றியுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் விழும் இரசாயனங்கள் மற்றும் பொருட்களும், தீயில் எரிந்த கொள்கலன்களும் கொழும்பு, வத்தளை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைகளில் ஒதுங்கியுள்ளன.
கப்பலின் உடைந்த பாகங்கள், மிதக்கும் கொள்கலன் பாகங்கள், எரிந்த பொருட்கள் எண்ணெய் மற்றும் சாம்பல் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் குப்பைகள் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.
இந்த நிலையில் குறித்த கப்பலில் இருந்து வெளியாகிய எண்ணெய் மற்றும் சில பொருட்கள் நீர்கொழும்புக்கு அருகிலுள்ள கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கின்றன.
இதற்கமைய நீர்கொழும்பு, ஜா-எல, கப்புகொட, சேத்துபாடுவ ஆகிய கடற்கரைகளில் இவ்வாறு பொருட்களையும் எண்ணெய் சேர்ந்த நீரையும் காணமுடிவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.