இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான். 36 வயதான பதான் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 27 வயதான சபா பேக் என்பவரை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்..
இவர்களுக்கு இம்ரான்கான் பதான் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிடப்பட்ட புகைப்படத்தில், இர்பானின் மனைவியின் முகம் மங்கலாக இருந்தது. இதனைக்கண்ட, நெட்டிசன்கள் இர்பான் பதானை விமர்சனம் செய்ய தொடங்கினர்.
மேலும், அவர் இர்பான்பதான் அவரது முகத்தை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. இதனால், அதே படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவாக வெளியிட்டுள்ள பதான், அதே படத்தை இங்கே நான் பதிவிடுகிறேன்.
மனைவியின் விருப்பப்படிதான், இன்ஸ்டாவில் அவரின் படம் மழுங்கடித்து வெளியிடப்பட்டது. நான் அவளுடைய துணைதான், அவளின் எஜமான் அல்ல என தெரிவித்துள்ளார்.
This picture is posted by my queen from my son’s account. We are getting lot of hate.Let me post this here as well.She blurred this pic by her choice. And Yes,I’m her mate not her master;). #herlifeherchoice pic.twitter.com/Xy6CB2kKWA
— Irfan Pathan (@IrfanPathan) May 25, 2021




















