கனடாவில் மொபைல் செயலியால் அறிமுகமான இளைஞரிடம் சிக்கி இளம் பெண் ஒருவர் மோசமாக சீரழிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மார்க்கம் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் மீது தற்போது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்த யார்க் பிராந்திய பொலிசார், திங்கட்கிழமை துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் தகவல் ஒன்று வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை மீட்டுள்ளனர்.
அவரை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் Tinder செயலி மூலம் குறித்த இளைஞரை அப்பெண் சந்தித்ததாக தெரிய வந்துள்ளது.
கென்னடி சாலையில் அமைந்துள்ள குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு சென்ற பெண்ணை ஆயுதத்தால் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த பெண்ணை குடியிருப்புக்கு வெளியே அழைத்து வந்து, வங்கியில் இருந்து பணம் எடுத்து அளிக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞரிடம் இருந்து தப்பிய குறித்த பெண், உடனையே 911 இலக்கத்திற்கு அழைத்து உதவி கோரியுள்ளார்.
இந்த நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், குறித்த இளைஞரின் குடியிருப்பை சுற்றி வளைத்த பொலிசார், அவரை கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் Masseiah Issac Ireland என அடையாளம் காணப்பட்ட நிலையில், Tinder செயலியில் தமக்கு 28 வயது என குறிப்பிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
குறித்த இளைஞரால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.